Skip to main content

Posts

Showing posts from 2015

ஆதி திரு வார்த்தை

ஆதி திரு வார்த்தை திவ்விய அற்புத பாலனாகப் பிறந்தார் ஆதந்தன் பாவத்தின் சாபத்தைத் தீர்த்திட ஆதிரையோரை யீடேற்றிட மாசற்ற ஜோதி திரித்துவத்தோர் வஸ்து மரியக் கன்னியிட முதித்து மகிமையை மறந்து தமை வெறுத்து மனுக்குமாரன் வேஷமாய் உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர் மின்னுஞ்சீர் வாசகர் மேனிநிறம் எழும் உன்னத காதலும் பொருந்தவே சர்வ நன்மைச் சொரூபனார் ரஞ்சிதனார் தாம் தாம் தன்னர வன்னர தீம் தீம் தீமையகற்றிட சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ ஷமென சோபனம் பாடவே இங்கிர்த இங்கிர்த இங்கிர்த நமது இருதயத்திலும் எங்கும் நிறைந்திட 1.ஆதாம் ஓதி ஏவினர் ஆபிரகாம் விசுவாசவித்து யூதர் சிம்மாசனத் தாளுகை செங்கோல் ஈசாய் வங்கிஷத் தானுதித்தார் 2.பூலோகப் பாவ விமோசனர் பூரணக் கிருபையின் வாசனர் மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன் மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார் 3.அல்லேலூயா! சங்கீர்த்தனம் ஆனந்த கீதங்கள் பாடவே அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீக்கிட அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார்

சோர்ந்து போகாதே மனமே

சோர்ந்து போகாதே மனமே சோர்ந்து போகாதே கண்டுனை அழைத்த தேவன் கைவிடுவாரோ 1.வாக்களித்த தேவனை நீ பாடிக் கொண்டாடு ஊக்கமான ஆவி உன்னைத் தாங்க மன்றாடு 2.துன்பங்கள் தொல்லைகள் உன்னைச் சூழ்ந்து கொண்டாலும் அன்பர் உன்னைத் தேற்றும் நேரம் ஆனந்தமல்லோ 3.சோதனைகளை ஜெயிப்பேன் பாக்கியவானல்லோ ஜீவகிரீடம் சூடும் நேரம் என்ன பேரின்பம் – சோர்ந்து

உமக்காக வாழணுமே

உமக்காக வாழணுமே என் இயேசுவே என் நேசரே - என்றும் உமக்காக வாழணுமே 1.என் ஆசை எல்லாம் நீர்தான் ஐயா என் ஏக்கம் எல்லாம் நீர்தான் ஐயா எனக்கொன்றும் வேண்டாம் இவ்வுலகில் உம் திருமார்பில் சாய்ந்திடுவேன் 2.என் பொருள் எல்லாம் உமக்கே ஐயா என் வாழ்க்கை எல்லாம் உமக்கே ஐயா நீர் போதும் எனக்கு இவ்வுலகில் உம் திருப்பாதம் அர்ப்பணித்தேன்