Skip to main content

Posts

Showing posts from August, 2013

வானம் பூமியோ பராபரன்

வானம் பூமியோ பராபரன் மானிடன் ஆனாரோ என்ன இது ஞானவான்களே நிதானவான்களே 1.பொன்னகரத்தாளும் உன்னதமே நீளும் பொறுமைக் கிருபாசனத்துரை பூபதி வந்ததே அதிசயம் - ஆ என்ன இது 2.மந்தைக் காட்டிலே மாட்டுக் கொட்டிலிலே கந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி நிந்தைப் பாவிகள் சொந்தக் கண் காட்சி - ஆ என்ன இது 3.வேறே பேரல்ல சுரர் விண்ணவர் யாருமல்லர் மாறில்லாத ஈறில்லாத வல்லமை தேவனே புல்லில் கிடக்கிறார் - ஆ என்ன இது 4.சீயோன் மாதே இனி கணம் தரியாதே மாயமென்னவோ உனக்குச் சொல்லவோ வந்தவர் மணவாளனல்லவோ - ஆ என்ன இது