Skip to main content

Posts

Showing posts from 2016

எப்படி நான் மறப்பேன்

உம் அன்பு எத்தனை பெரிதையா இயேசையா உம் அன்பு பெரிதையா எப்படி நான் மறப்பேன் எப்படி நான் மறப்பேன் எப்படி நான் மறப்பேன் உம் அன்பை 1.பாவத்தின் பாரத்தால் சோர்ந்து நான் போகையில் பாசமாய் வந்தென்னை இரத்தத்தால் மீட்டீர் 2.தனிமையில் கண்ணீரில் கலங்கி நான் நிற்க்கையில் வலக்கரம் கொண்டென்னை மார்பில் அணைத்தீர் 3.துரோகி நான் உம்மையே பரிகாசம் செய்தேனே நேசமாய் வந்தென்னை சேர்த்து கொண்டீரே

ஏசுவையே துதி செய்

ஏசுவையே துதி செய், நீ மனமே ஏசுவையே துதி செய் 1.மாசணுகாத பராபர வஸ்து நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து 2.அந்தரவான் தரையுந்தரு தந்தன் சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் 3.எண்ணின காரியம் யாவு முகிக்க மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க