என் மீட்பர் எனக்காய் இரத்தம் சிந்தி மரித்து உயிர்த்தெழுந்தார். அவர் காட்டும் பாதை ஜீவ ஒளியும், அவரின் வார்த்தை ஜீவ ஊற்றுமாம். அவர் எனக்காய் ஜீவனை கொடுத்து என்றும் என்னோடு இருக்கிறவர். அவரை நாடுவதும் போற்றுவதுமே; என் வாழ்வின் நோக்கம். என் மீட்பர் இரத்தம் சிந்தினார் நான் பரிசுத்தனானேன் அவர் எனக்காய் மரித்தெழுந்தார் நான் மறுரூபமானேன் 1.அவர் பாதை ஜீவ ஒளியாம் என் இதயம் தேடுதே அவர் வார்த்தை ஜீவ ஊற்றாம் என் இதயம் நாடுதே 2.அவர் எனக்காய் உயிர் கொடுத்தார் என் உள்ளம் போற்றுதே அவர் என்னோடு என்றும் இருப்பார் என் உள்ளம் வாழ்த்துதே
எனக்கு பிடித்த பாடல் வரிகளின் தொகுப்பு