கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன் கிருபையால் இறங்கிடுமே தடுமாற்றமில்லாமல் நான் வாழ்ந்திட உம் கிருபையால் நிறைத்திடுமே 1) உம் கிருபை இல்லையென்றால் நான் இல்லை அதை நீர் நன்றாய் அறிவீர் தடுமாற்றமில்லாமல் நான் வாழ்ந்திட உம் கிருபையால் நிறைத்திடுமே 2) என் சுய பெலத்தால் ஒன்றும் செய்திடேன் அதை நீர் நன்றாய் அறிவீர் உம் பெலத்தால் எல்லாம் செய்திட உம் கிருபையால் நிறைத்திடுமே 3)சோதனைகள் தாங்க பெலனில்லை அதை நீர் நன்றாய் அறிவீர் சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்க உம் கிருபையால் நினைத்திடுமே
எனக்கு பிடித்த பாடல் வரிகளின் தொகுப்பு