Skip to main content

Posts

Showing posts with the label பாடுகள்

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை கண்கள் கலங்கிடுதே கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால் நெஞ்சம் நெகிழ்ந்திடுதே 1.கெத்செமனே பூங்காவினில் கதறி அழும் ஓசை எத்திசையும் தொனிக்கின்றதே எங்கள் மனம் திகைக்கின்றதே கண்கள் கலங்கிடுதே - கல்வாரி 2.சிலுவையில் மாட்டி வதைத்தனரோ உம்மை செந்நிறம் ஆக்கினரோ அப்போதும் அவர்க்காய் வேண்டினீரே அன்போடு அவர்களை கண்டீரன்றோ அன்பே உம் அன்பு பெரிதே - கல்வாரி 3.என்னையும் உம்மைப் போல் மாற்றிடவே உம் ஜீவன் தந்தீரன்றோ என் தலை தரை மட்டும் தாழ்த்துகிறேன் தந்து விட்டேன் அன்பு கரங்களிலே ஏற்று என்றும் நடத்தும் - கல்வாரி