Skip to main content

Posts

ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க

ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க உனக்கென்ன குறை மகனே சிறுவந்தொட்டுனை யரு செல்லப் பிள்ளைபோற் காத்த உரிமைத் தந்தை யென்றென்றும் உயிரோடிருப்பாருன்னை. கப்பலினடித் தட்டில் களைப்புடன் தூங்குவார் கதறுமுன் சத்தங்க்கேட்டால் கடல் புசலமர்த்துவார் எப்பெரிய போரிலும் ஏற்ற ஆயுதமீவார் ஏழைப்பிள்ளை உனக்கு ஏற்ற தந்தை நானென்பார் கடல் தனக் கதிகாரி கர்த்தரென் றறிவாயே கடவாதிருக்க வெல்லை கற்பித்தாரவர்சேயே விடுவாளோ பிள்ளையைத் தாய் மேதினியிற்றனியே மெய்ப் பரனை நீதினம் விசுவாசித்திருப்பாயே உன்னாசை விசுவாசம் ஜெபமும் வீணாகுமா உறக்க மில்லாதவவ்ர் கண் உன்னைவிட் டொழியுமா இந்நில மதீலுனக் கென்னவந்தாலும் சும்மா இருக்குமா அவர்மனம் உருக்கமில்லாதே போமா உலகப் பேயுடலாசை உன்னை மோசம் செய்யாது ஊக்கம் விடாதே திருவுளமுனை மறவாது இலக்கும் பரிசுத்தாவி எழில் வரம் ஒழியாது என்றும் மாறா நண்பன் இரட்சகருடன் சேர்ந்து.

இனியும் உம்மை கேட்பேன்

இனியும் உம்மை கேட்பேன் நீர் சொல்வதை நான் செய்வேன் என் கூட பேசுங்கப் பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா- நீர் பேசாவிட்டா நான் உடைந்து போவேன் உருக்குலைந்து போவேன் என் கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா -இனியும் நீர் பேசாவிட்டா நான் தளர்ந்துபோவே தள்ளாடிப்போவேன்- என்கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா -இனியும்

பிறர் வாழவேண்டுமெனில் நான் சாக வேண்டும்

பிறர் வாழவேண்டுமெனில் நான் சாக வேண்டும் நான் சாகவேண்டுமெனில் அவர் வாழ வேண்டும் – எனில் இயேசு தினம் வாழவேண்டும் 1. நான் என்னும் ஆணவத்தால் நாளெல்லாம் வாழ்ந்திருந்தேன் பிறர் வாழ்வை எண்ணாமல் பாதையிலே மயங்கி நின்றேன் இன்றே என்னை அர்ப்பணம் செய்திடுவேன் 2. மற்றவர்கள் மனம் மகிழ மன்னவனே நீ மரித்தாய் மற்றவர்கள் மனம் நோக மதியிழந்து நான் இருந்தேன் இன்றே என்னை அர்ப்பணம் செய்திடுவேன் 3. உலகுக்காய் நான் வாழ ஒரு மனது துடிக்கையிலே உள்ளுக்குள் கறைபட்ட மறுமனது மறுத்ததையா இன்றே என்னை அர்ப்பணம் செய்திடுவேன்

கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்

கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன் கிருபையால் இறங்கிடுமே தடுமாற்றமில்லாமல் நான் வாழ்ந்திட உம் கிருபையால் நிறைத்திடுமே 1) உம் கிருபை இல்லையென்றால் நான் இல்லை அதை நீர் நன்றாய் அறிவீர் தடுமாற்றமில்லாமல் நான் வாழ்ந்திட உம் கிருபையால் நிறைத்திடுமே 2) என் சுய பெலத்தால் ஒன்றும் செய்திடேன் அதை நீர் நன்றாய் அறிவீர் உம் பெலத்தால் எல்லாம் செய்திட உம் கிருபையால் நிறைத்திடுமே 3)சோதனைகள் தாங்க பெலனில்லை அதை நீர் நன்றாய் அறிவீர் சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்க உம் கிருபையால் நினைத்திடுமே

உம்மை அதிகம் அதிகம் நேசிக்க

உம்மை அதிகம் அதிகம் நேசிக்க கிருபை வேண்டுமே பொய்யான வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமே மெய்யாக உம்மை நேசித்து நான் வாழ வேண்டுமே உயர்வான நேரத்திலும் என் தாழ்வின் பாதையிலும் நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும் ஏமாற்றும் வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமே ஏமாற்றமில்லா வாழ்க்கை நானும் வாழ வேண்டுமே பெலவீன நேரத்திலும் பெலமுள்ள காலத்திலும் நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும் உம்மை விட்டு தூரம் போன நாட்கள் போதுமே இன்னும் விடாமல் உம்மை பற்றி கொண்டு வாழ வேண்டுமே

விந்தை கிறிஸ்தேசு ராஜா

விந்தை கிறிஸ்தேசு ராஜா உந்தன் சிலுவையென் மேன்மை (2) சுந்தரமிகும் இந்த பூவில் எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் – விந்தை 1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி செல்வாக்குகள் எனக்கிருப்பினும் குருசை நோக்கிப் பார்க்க எனக்கு உரிய பெருமைகள் யாவும் அற்பமே – விந்தை 2. உம் குருசே ஆசிக்கெல்லாம் ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம் துங்க ரத்த ஊற்றில் மூழ்கித் தூய்மையடைந்தே மேன்மையாகினேன் – விந்தை 3. சென்னி, விலா, கை, கானின்று சிந்துதோ துயரோடன்பு, மன்னா இதைப் போன்ற காட்சி எந்நாளிலுமே எங்கும் காணேன் – விந்தை 4. இந்த விந்தை அன்புக்கீடாய் என்ன காணிக்கை ஈந்திடுவேன் எந்த அரும் பொருள் ஈடாகும்? என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் – விந்தை

நம்பி வந்தேன் மேசியா நான்

நம்பி வந்தேன் மேசியா நான் நம்பி வந்தேனே - திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான் நம்பி வந்தேனே. தம்பிரான் ஒருவனே தஞ்சமே தருவனே - வரு தவீது குமார குரு பரமனுவேலே நம்பி வந்தேனே. நின்பாத தரிசனம் அன்பான கரிசனம் - நித நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பி வந்தேனே. நாதனே கிருபை கூர் வேதனே சிறுமை தீர் - அதி நலம் மிகும உனதிரு திருவடி அருளே நம்பி வந்தேனே. பாவியில் பாவியே கோவியில் கோவியே - கண பரிவுடன் அருள் புரி அகல விடாதே நம்பி வந்தேனே. ஆதி ஓலோலமே பாதுகா காலமே - உன தடிமைகள் படு துயர் மெத்த நம்பி வந்தேனே.