Skip to main content

Posts

Showing posts with the label ஆற்றல்

அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே

யோபுவின் வாழ்க்கையில் தேவன் செய்த நன்மைகளை மையமாக கொண்ட பாடல் இது. தேவன் முடிவெடுத்தால் அதை மாற்ற யாரால் கூடும். அவர் எனக்கென்று முன்குறித்துள்ள யாவற்றையும் நிறைவேற்றுவார். நம்மை தேவன் ஒரு பொருட்டாய் எண்ணுவதற்கும் நாம் எம்மாத்திரம்? ஆனாலும் அவர் நம்மை காலைதோறும் நோக்கி பார்த்து நிமிடந்தோரும் விசாரிக்கிறாரே? அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே நீர் நினைத்தது ஒரு நாளும் தடைபடாதையா 1.நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும் எனக்கென முன்குறித்த எதையுமே எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர் உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம் 2.நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய் எண்ணுவதற்கு காலைதோறும் கண்ணோக்கிப் பார்க்கிறீர் நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர் உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம் 3.என்னைப் புடமிட்டால் நான் பொன்னாக துலங்கிடுவேன் நான் போகும் பாதைகளை அறிந்தவரே உந்தன் சொல்லை உணவு போல காத்துக் கொண்டேன் உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம்