Skip to main content

Posts

Showing posts from March, 2012

இறைவா உம் அருள் காண செய்யும்

இயேசுவானவர் இந்த உலகத்தில் மனிதனாய் வாழ்ந்தப் பொழுது செய்த அநேக அற்புதங்களில் சிலவற்றை இந்த பாடல் எடுத்துரைக்கிறது. அவர் மரித்த லாசருவை உயிரோடு எழுப்பியதையும், குஷ்டரோகியை குணப்படுத்தியதையும் இந்த அழகான பாடல் வரிகள் நினைப்பூட்டி நம்மையும் நம் விசுவாசத்தில் உறுதிப் படுத்துகிறது.

எந்தன் இயேசையா

இயேசு கிறிஸ்து நம் மேல் கொண்ட அளவற்ற அன்பை குறித்தானப் பாடல் தான் இது. சிலுவையில் இரத்தம் சிந்தி நம் பாவங்கள் எல்லாம் நீங்க செய்து நம் ஜீவனாய் இருக்கும் ஆண்டவரை துதிக்காமல் இருப்பதெப்படி? உலகம் நம்மை வெறுத்து ஆகாதவன் என்று தள்ளினப் போதும் நம்மை அணைத்து சேர்த்து கொண்டவரல்லவா அவர்?

காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு

எந்த சூழ்நிலையில் நாம் இருந்தாலும் ஆண்டவர் நம்மை மீட்க வல்லவர் என்னும் பொருள் கொண்ட பாடல் இது. சோதனை வரும் நேரத்தில் பரத்திலிருந்து ஜெயம் நம் செவிதனில் ஒலிக்கும் என்னும் வரி துன்ப காலத்தில் நம்மை பலப்படுத்துவதாக உள்ளது. என்ன வந்தாலும் என் மீட்பரை நம்புவேன், யார் கைவிட்டாலும் அவரை நான் பின்பற்றுவேன் என்னும் பொருள் படும் வரிகள் நம்மை விசுவாசத்தில் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.