Skip to main content

Posts

Showing posts with the label இயேசு

உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கும்

உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கும் (2) சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் காணட்டும் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 பரிசுத்தர் பரிசுத்தரே – 2 1. ஒருவராய் சாவாமையுள்ளவர் அவர் சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர் (2) அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர் இயேசுவே உம்மையே ஆராதிப்பேன் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 பரிசுத்தர் பரிசுத்தரே – 2 2. ஆதியும் அந்தமுமானவர் அவர் அல்பாவும் ஒமேகாவுமானவர் அவர் (2) இருந்தவரும் இருப்பவரும் சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 பரிசுத்தர் பரிசுத்தரே – 2 3. எல்லா நாமத்திலும் மேலானவர் முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன் (2) துதிகனம் மகிமைக்கு பாத்திரரே தூயவர் இயேசுவை உயர்ந்திடுவேன் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 பரிசுத்தர் பரிசுத்தரே – 2

நீர் எனக்கு போதும்

நீர் எனக்கு போதும் (4) எந்நாளும் எப்போதும் நீரே என் சொந்தம் இயேசுவே நீர் எனக்கு போதும் (2) 1. என் தாயும் தந்தையும் நீர் தானே தாங்கிடும் துருகமும் நீர் தானே – (2) சுற்றமும் நட்பும் நீர் தானே சுமந்திடும் சுமைதாங்கி நீர் தானே – (2) 2. தேற்றிடும் சிநேகிதன் நீர் தானே ஆறுதல் தேறுதல் நீர் தானே – (2) ஞானமும் அறிவும் நீர் தானே என் சுகம் பெலனும் நீர் தானே – (2)

என் நிலைமை நன்றாய் அறிந்தவர்

என் நிலைமை நன்றாய் அறிந்தவர் பாவி என்னை அழைத்தவர் மீறின பின்பும் வெறுக்காதவர் உம்மைப்போல் என்னை நேசிக்க ஒருவரும் இல்லை நேசித்தவரில் இது போல் அன்பை இன்னும் காணவில்லை விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லை உம் அன்பை மட்டும் என்னவென்று சொல்ல தெரியவில்லை தேடி வந்த நேசமே ஆருயிர் இயேசுவே உம் அன்பில் ஒன்றே உண்மை உண்டென்று கண்டேன்

என் இன்ப துன்ப நேரம்

என் இன்ப துன்ப நேரம் நான் உம்மைச் சேருவேன் நான் நம்பிடுவேன் பாரில் உம்மைச் சார்ந்திடுவேன் 1.நான் நம்பிடும் நேசர் இயேசுவே நான் என்றென்றும் நம்பிடுவேன் தேவனே ராஜனே தேற்றி என்னைத் தாங்கிடுவார் 2.இவரே நல்ல நேசர் இயேசுவே என்றும் தாங்கி நடத்துவார் தீமைகள் சேதங்கள் நேராது என்னைக் காத்திடுவார் 3.பார் போற்றும் இராஜன் புவியில் நான் வென்றிட செய்திடுவார் மேகத்தில் தோன்றுவார் அவரைப் போல மாறிடுவேன்

உமக்காக வாழணுமே

உமக்காக வாழணுமே என் இயேசுவே என் நேசரே - என்றும் உமக்காக வாழணுமே 1.என் ஆசை எல்லாம் நீர்தான் ஐயா என் ஏக்கம் எல்லாம் நீர்தான் ஐயா எனக்கொன்றும் வேண்டாம் இவ்வுலகில் உம் திருமார்பில் சாய்ந்திடுவேன் 2.என் பொருள் எல்லாம் உமக்கே ஐயா என் வாழ்க்கை எல்லாம் உமக்கே ஐயா நீர் போதும் எனக்கு இவ்வுலகில் உம் திருப்பாதம் அர்ப்பணித்தேன்

இயேசு அழைக்கிறார்

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே இயேசு அழைக்கிறார் 1.எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார் என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால் எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் 2.கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணிபோல் காப்பார் கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும் கருத்துடன் உன்னைக் காத்திடவே 3.சோர்வடையும் நேரத்தில் பெலன் உனக்களிப்பார் அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால் தாமதமின்றி நீ வந்திடுவாய் 4.சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம் யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியே கிருபையாய் அன்பை அளித்திடவே

இதய துடிப்பை புரிந்து கொள்ள இதயம் இல்லையே

இதய துடிப்பை புரிந்து கொள்ள இதயம் இல்லையே மனதின் உணர்வை உணர்ந்து கொள்ள மனிதர் இல்லையே உலக ஓடையில் வாழ்க்கை படகு ஓட மறுக்குதே ஓட்டைப் படகை ஒட்டிட எனக்கு ஒருவர் இல்லையே எனக்காய் வாழ எனக்காய் மரிக்க எனக்கு யார் உண்டு எனக்காய் மரித்து உயிர்த்து எழுந்த இயேசு தான் உண்டு வாழ்க்கை மேடையில் ஊமை வேடம் எனக்கு பொருந்துமே பாலை வனத்தில் கானல் நீரும் காணவில்லையே எனது மனது வீணை மீட்க வித்துவான் இல்லையே மனது வீட்டை மடக்க செய்ய மனதும் இல்லையே கண்ணின் மணி போல் ஏற்று கொள்ள இமைகள் இல்லையே பார்வை நாடகம் எனது வாழ்வில் வெளிச்சம் இல்லையே உயர வானில் பறந்து செல்ல சிறகு இல்லையே பூமி தன்னில் வாசம் செய்ய மனதும் இல்லையே