என் இன்ப துன்ப நேரம் நான் உம்மைச் சேருவேன் நான் நம்பிடுவேன் பாரில் உம்மைச் சார்ந்திடுவேன் 1.நான் நம்பிடும் நேசர் இயேசுவே நான் என்றென்றும் நம்பிடுவேன் தேவனே ராஜனே தேற்றி என்னைத் தாங்கிடுவார் 2.இவரே நல்ல நேசர் இயேசுவே என்றும் தாங்கி நடத்துவார் தீமைகள் சேதங்கள் நேராது என்னைக் காத்திடுவார் 3.பார் போற்றும் இராஜன் புவியில் நான் வென்றிட செய்திடுவார் மேகத்தில் தோன்றுவார் அவரைப் போல மாறிடுவேன்
எனக்கு பிடித்த பாடல் வரிகளின் தொகுப்பு