Skip to main content

Posts

Showing posts from April, 2014

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக் கென்ன குறைவுண்டு? நீ சொல், மனமே 1.என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர், என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்; விண்ணுல குயர்ந்தோர் , உன்னதஞ்சிறந்தோர், மித்திரனே சுகபத்திர மருளும் - என் மீட்பர் 2.பாவமோ, மரணமோ, நரகமோ, பேயோ, பயந்து நடுங்கிட ஜெயஞ் சிறந்தோர், சாபமே தீர்த்தோர் சற்குருநாதன்; சஞ்சலமினியேன் ? நெஞ்சமே, மகிழாய் - என் மீட்பர் 3.ஆசி செய்திடுவார், அருள்மிக அளிப்பார், அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்; மோசமே மறைப்பார், முன்னமே நடப்பார்; மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும் - என் மீட்பர் 4.கவலைகள் தீர்ப்பார், கண்ணீர் துடைப்பார், கடைசிமட்டுங் கைவிடா திருப்பார்; பாவமனிப்பளிப்பார், பாக்கியங் கொடுப்பார், பரம பதவியினுள் என்றனை எடுப்பார் - என் மீட்பர் 5.போனது போகட்டும், புவிவசை பேசட்டும், பொல்லான் அம்புக ளெய்திடட்டும், ஆனது ஆகட்டும், அருள்மழை பெய்திடும், அன்புமிகும் பேரின்ப மெனக்கருள் - என் மீட்பர்