துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம் சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம் 1.அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன் கதி உம்பர்கள் தொழும் இங்கித கருணைப் பிர தாபன் 2.மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார் நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மா பரிசுத்தனார் 3.திருவான் உலகரசாய் வளர் தேவ சொரூபானார் ஒரு மாதுடை வினை மாறிட நரர் ரூபமதானார் 4.அபிராம் முனி யிடமேவிய பதிலாள் உபகாரன் எபிரேயர்கள் குளம் தாவீதென் அரசற் கோர் குமாரன் 5.சாதா ரண வேதா கம சாஸ்த்ர சுவிசேஷன கோதே புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன் 6.விண்ணாடரும் மண்ணாடரும் மேவுந் திருப் பாதன் பண் ணோதுவர் கண்ணாம் வளர் பர மண்டல நாதன்
எனக்கு பிடித்த பாடல் வரிகளின் தொகுப்பு