Skip to main content

Posts

Showing posts from April, 2012

மறவாதே மனமே தேவ சுதனை

தேவகுமாரன் இயேசுவை ஒருபொழுதும் மறந்து விடாதே என்று நாம் நம் மனதோடு சொல்லிக் கொள்வது போல் இப்பாடல் அமைந்துள்ளது. பாவியாகிய என்னைத் தேடி இப்பூமிக்கு வந்து நீதிமானாய் மாற்றின தேவகுமாரனை நான் மறந்து விடுவேனோ? தீமைகள் நீக்கி ஆண்டு முழுவதும் என்னை காத்து வழிநடத்திய ஆண்டவரை நான் எப்படி மறப்பேன்? வருடங்கள் பல கடந்திடினும் அவர் இரக்கம் மட்டும் மாறாதபோது நான் அவரை மறக்கலாகுமோ? மறவாதே மனமே தேவ சுதனை மறவாதே மனமே ஒருபொழுதும் 1.திறமதாக உனைத் தேடிப் புவியில் வந்து அறமதாகச் செய்த ஆதி சுதன் தயவை - மறவாதே 2.நீண்ட தீமை யாவும் நீக்கிச் சுகம் அளித்திவ் வாண்டு முழுதும் காத்த ஆண்டவனை எந்நாளும் - மறவாதே 3.வருஷம் வருஷம் தோறும் மாறாத் தமதிரக்கம் பெருகப் பெருகச் செய்யும் பிதாவின் அனுக்ரகத்தை - மறவாதே