Skip to main content

துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்

துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்
சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம்

1.அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன்
கதி உம்பர்கள் தொழும் இங்கித கருணைப் பிர தாபன்

2.மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார்
நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மா பரிசுத்தனார்

3.திருவான் உலகரசாய் வளர் தேவ சொரூபானார்
ஒரு மாதுடை வினை மாறிட நரர் ரூபமதானார்

4.அபிராம் முனி யிடமேவிய பதிலாள் உபகாரன்
எபிரேயர்கள் குளம் தாவீதென் அரசற் கோர் குமாரன்

5.சாதா ரண வேதா கம சாஸ்த்ர சுவிசேஷன
கோதே புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன்

6.விண்ணாடரும் மண்ணாடரும் மேவுந் திருப் பாதன்
பண் ணோதுவர் கண்ணாம் வளர் பர மண்டல நாதன்

Comments

Popular posts from this blog

அன்பின் நாயகனே

அன்பின் நாயகனே ஆறுதலின் ஊற்றே என்னை அழைத்தவர் நீர் அல்லவா உம்மை நேசிக்கிறேன் 1. அலைகள் படகை ஆழ்த்தும்போது காற்று பலமாய் அடிக்கும்போது படகு முழுகும் நிலை வரும்போது நம்பிக்கை எல்லாம் இழக்கும்போது 'பயப்படாதே நான் உன்னுடனே மகனே நான் உந்தன் அருகில் தானே  எந்தன் காவல் உனக்கல்லவா' என்ற அன்பை நான் மறப்பேனோ  2. எந்தன் வாழ்வின் தூயவனே வாழ்க்கை எல்லாம் உமக்கு தானே உம்மை விட்டு எங்கு செல்வேன் உந்தன் பின்னால் வருவேனே உந்தன் சித்தமே என் வாழ்வில் உந்தன் அழைப்பே என் மனதில் என்னையே என்றும் உமக்கென தந்த அன்பை நீர் மறப்பீரோ

எப்படி நான் மறப்பேன்

உம் அன்பு எத்தனை பெரிதையா இயேசையா உம் அன்பு பெரிதையா எப்படி நான் மறப்பேன் எப்படி நான் மறப்பேன் எப்படி நான் மறப்பேன் உம் அன்பை 1.பாவத்தின் பாரத்தால் சோர்ந்து நான் போகையில் பாசமாய் வந்தென்னை இரத்தத்தால் மீட்டீர் 2.தனிமையில் கண்ணீரில் கலங்கி நான் நிற்க்கையில் வலக்கரம் கொண்டென்னை மார்பில் அணைத்தீர் 3.துரோகி நான் உம்மையே பரிகாசம் செய்தேனே நேசமாய் வந்தென்னை சேர்த்து கொண்டீரே

கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்

கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன் கிருபையால் இறங்கிடுமே தடுமாற்றமில்லாமல் நான் வாழ்ந்திட உம் கிருபையால் நிறைத்திடுமே 1) உம் கிருபை இல்லையென்றால் நான் இல்லை அதை நீர் நன்றாய் அறிவீர் தடுமாற்றமில்லாமல் நான் வாழ்ந்திட உம் கிருபையால் நிறைத்திடுமே 2) என் சுய பெலத்தால் ஒன்றும் செய்திடேன் அதை நீர் நன்றாய் அறிவீர் உம் பெலத்தால் எல்லாம் செய்திட உம் கிருபையால் நிறைத்திடுமே 3)சோதனைகள் தாங்க பெலனில்லை அதை நீர் நன்றாய் அறிவீர் சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்க உம் கிருபையால் நினைத்திடுமே