நம்பி வந்தேன் மேசியா நான்
நம்பி வந்தேனே - திவ்ய
சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான் நம்பி வந்தேனே.
தம்பிரான் ஒருவனே
தஞ்சமே தருவனே - வரு
தவீது குமார குரு பரமனுவேலே
நம்பி வந்தேனே.
நின்பாத தரிசனம்
அன்பான கரிசனம் - நித
நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில்
நம்பி வந்தேனே.
நாதனே கிருபை கூர்
வேதனே சிறுமை தீர் - அதி
நலம் மிகும உனதிரு திருவடி அருளே நம்பி வந்தேனே.
பாவியில் பாவியே
கோவியில் கோவியே - கண
பரிவுடன் அருள் புரி அகல விடாதே நம்பி வந்தேனே.
ஆதி ஓலோலமே
பாதுகா காலமே - உன
தடிமைகள் படு துயர் மெத்த நம்பி வந்தேனே.
Comments
Post a Comment