ஆசையாய் தொடர்ந்து ஓடுகிறேன்
எதற்காக பிடித்தாரோ
அதை நான் பிடித்துக்கொள்ள
பின்னானவை மறந்தேன் மறந்தேன் நான்
கண்முன்னே என் இயேசு தான்
பரமன் அழைத்தாரே
அந்த பந்தயப் பொருளுக்காய்
இலக்கை நோக்கி ஓடுகிறேன்
எதற்காய் அழைத்தாரோ
அதை நான் செய்து முடிக்க
கர்த்தராம் கிறிஸ்து இயேசு ராஜாவை
அறிகிற அறிவின் மேன்மைக்காக
எல்லாமே பயனற்றவை
நஷ்டம் குப்பையென
தூக்கி நான் எறிந்து விட்டேன்
எதற்காய் அழைத்தாரோ
அதை நான் செய்து முடிக்க
Comments
Post a Comment