Skip to main content

கவர்ச்சி நாயகனே

கவர்ச்சி நாயகனே
கண்களில் நிறைந்தவரே
கரம் பிடித்தவரே
கைவிடா கன்மலையே

உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம்
உயிருள்ள நாளெல்லாம்
உமக்கே ஸ்தோத்திரம்

1.என்னை இழுத்துக்கொள்ளும்
ஓடி வந்திடுவேன்
அறைக்குள் அழைத்துச் செல்லும்
அன்பில் களிகூறுவேன்

2.திராட்சை இரசம் பார்க்கிலும்
இனிமையானவரே
ஊற்றுண்ட பரிமளமே
உலகெல்லாம் உம் மணமே

3.இடக்கையால் தாங்குகிறீர்
வலக்கையால் தழுவுகிறீர்
எனக்கு உரியவரே
இதயம் ஆள்பவரே

4.உம் மீது கொண்ட நேசம்
அக்கினி ஜுவாலையன்றோ
தண்ணீரும் வெள்ளங்களும்
தணிக்க முடியாதையா

Comments

Popular posts from this blog

எப்படி நான் மறப்பேன்

உம் அன்பு எத்தனை பெரிதையா இயேசையா உம் அன்பு பெரிதையா எப்படி நான் மறப்பேன் எப்படி நான் மறப்பேன் எப்படி நான் மறப்பேன் உம் அன்பை 1.பாவத்தின் பாரத்தால் சோர்ந்து நான் போகையில் பாசமாய் வந்தென்னை இரத்தத்தால் மீட்டீர் 2.தனிமையில் கண்ணீரில் கலங்கி நான் நிற்க்கையில் வலக்கரம் கொண்டென்னை மார்பில் அணைத்தீர் 3.துரோகி நான் உம்மையே பரிகாசம் செய்தேனே நேசமாய் வந்தென்னை சேர்த்து கொண்டீரே

அன்பின் நாயகனே

அன்பின் நாயகனே ஆறுதலின் ஊற்றே என்னை அழைத்தவர் நீர் அல்லவா உம்மை நேசிக்கிறேன் 1. அலைகள் படகை ஆழ்த்தும்போது காற்று பலமாய் அடிக்கும்போது படகு முழுகும் நிலை வரும்போது நம்பிக்கை எல்லாம் இழக்கும்போது 'பயப்படாதே நான் உன்னுடனே மகனே நான் உந்தன் அருகில் தானே  எந்தன் காவல் உனக்கல்லவா' என்ற அன்பை நான் மறப்பேனோ  2. எந்தன் வாழ்வின் தூயவனே வாழ்க்கை எல்லாம் உமக்கு தானே உம்மை விட்டு எங்கு செல்வேன் உந்தன் பின்னால் வருவேனே உந்தன் சித்தமே என் வாழ்வில் உந்தன் அழைப்பே என் மனதில் என்னையே என்றும் உமக்கென தந்த அன்பை நீர் மறப்பீரோ

வானம் பூமியோ பராபரன்

வானம் பூமியோ பராபரன் மானிடன் ஆனாரோ என்ன இது ஞானவான்களே நிதானவான்களே 1.பொன்னகரத்தாளும் உன்னதமே நீளும் பொறுமைக் கிருபாசனத்துரை பூபதி வந்ததே அதிசயம் - ஆ என்ன இது 2.மந்தைக் காட்டிலே மாட்டுக் கொட்டிலிலே கந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி நிந்தைப் பாவிகள் சொந்தக் கண் காட்சி - ஆ என்ன இது 3.வேறே பேரல்ல சுரர் விண்ணவர் யாருமல்லர் மாறில்லாத ஈறில்லாத வல்லமை தேவனே புல்லில் கிடக்கிறார் - ஆ என்ன இது 4.சீயோன் மாதே இனி கணம் தரியாதே மாயமென்னவோ உனக்குச் சொல்லவோ வந்தவர் மணவாளனல்லவோ - ஆ என்ன இது