இவ்வுலகில் நம்மை நம் பெற்றோரே நேசிக்காவிடிலும், நமக்கு துணையாய் இருப்பதாய் வாக்களித்தவர்கள் கூட நம்மை கைவிட்டாலும், சோதனையும் வேதனையும் நம்மை துக்கத்தில் ஆழ்த்தினாலும், நமக்கு எக்காலத்திலும் அடைக்கலமான, தேவன் ஒருவர் உண்டு. இந்த பொல்லாத உலகில் அவரே நமக்கு ஆதாரம் என்னும் பொருள் கொண்ட பாடல் இது.
ஆதாரம் நீர் தான் ஐயா,என்துரையே
ஆதாரம் நீர் தான் ஐயா
சூதாம் உலகில் நான் தீதால் மயங்கையில்
1.மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில்
மற்றோர்க்கு பற்றேதையா எளியன் மேல்
மற்றோர்க்கு பற்றேதையா எளியனுக்கு -ஆதாரம்
2.நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர்
நட்டாற்றில் விட்டாரையா தனியனை
நட்டாற்றில் விட்டாரையா தனியனுக்கு -ஆதாரம்
3.கற்றோர் பெருமையே மற்றோர் அருமையே
வற்றா கிருபை நதியே என்பதியே
வற்றா கிருபை நதியே என்பதியே -ஆதாரம்
4.சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்து
துக்கம் மிகுவேளையில் என் சுகிர்தமே
துக்கம் மிகுவேளையில் உன் தாசனுக்கு -ஆதாரம்
ஆதாரம் நீர் தான் ஐயா,என்துரையே
ஆதாரம் நீர் தான் ஐயா
சூதாம் உலகில் நான் தீதால் மயங்கையில்
1.மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில்
மற்றோர்க்கு பற்றேதையா எளியன் மேல்
மற்றோர்க்கு பற்றேதையா எளியனுக்கு -ஆதாரம்
2.நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர்
நட்டாற்றில் விட்டாரையா தனியனை
நட்டாற்றில் விட்டாரையா தனியனுக்கு -ஆதாரம்
3.கற்றோர் பெருமையே மற்றோர் அருமையே
வற்றா கிருபை நதியே என்பதியே
வற்றா கிருபை நதியே என்பதியே -ஆதாரம்
4.சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்து
துக்கம் மிகுவேளையில் என் சுகிர்தமே
துக்கம் மிகுவேளையில் உன் தாசனுக்கு -ஆதாரம்
Comments
Post a Comment