Skip to main content

ஆதாரம் நீர் தான் ஐயா

இவ்வுலகில் நம்மை நம் பெற்றோரே நேசிக்காவிடிலும், நமக்கு துணையாய் இருப்பதாய் வாக்களித்தவர்கள் கூட நம்மை கைவிட்டாலும், சோதனையும் வேதனையும் நம்மை துக்கத்தில் ஆழ்த்தினாலும், நமக்கு எக்காலத்திலும் அடைக்கலமான, தேவன் ஒருவர் உண்டு. இந்த பொல்லாத உலகில் அவரே நமக்கு ஆதாரம் என்னும் பொருள் கொண்ட பாடல் இது.

ஆதாரம் நீர் தான் ஐயா,என்துரையே
ஆதாரம் நீர் தான் ஐயா
சூதாம் உலகில் நான் தீதால் மயங்கையில்

1.மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில்
மற்றோர்க்கு பற்றேதையா எளியன் மேல்
மற்றோர்க்கு பற்றேதையா எளியனுக்கு -ஆதாரம்

2.நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர்
நட்டாற்றில் விட்டாரையா தனியனை
நட்டாற்றில் விட்டாரையா தனியனுக்கு -ஆதாரம்

3.கற்றோர் பெருமையே மற்றோர் அருமையே
வற்றா கிருபை நதியே என்பதியே
வற்றா கிருபை நதியே என்பதியே -ஆதாரம்

4.சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்து
துக்கம் மிகுவேளையில் என் சுகிர்தமே
துக்கம் மிகுவேளையில் உன் தாசனுக்கு -ஆதாரம்

Comments

Popular posts from this blog

எப்படி நான் மறப்பேன்

உம் அன்பு எத்தனை பெரிதையா இயேசையா உம் அன்பு பெரிதையா எப்படி நான் மறப்பேன் எப்படி நான் மறப்பேன் எப்படி நான் மறப்பேன் உம் அன்பை 1.பாவத்தின் பாரத்தால் சோர்ந்து நான் போகையில் பாசமாய் வந்தென்னை இரத்தத்தால் மீட்டீர் 2.தனிமையில் கண்ணீரில் கலங்கி நான் நிற்க்கையில் வலக்கரம் கொண்டென்னை மார்பில் அணைத்தீர் 3.துரோகி நான் உம்மையே பரிகாசம் செய்தேனே நேசமாய் வந்தென்னை சேர்த்து கொண்டீரே

கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்

கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன் கிருபையால் இறங்கிடுமே தடுமாற்றமில்லாமல் நான் வாழ்ந்திட உம் கிருபையால் நிறைத்திடுமே 1) உம் கிருபை இல்லையென்றால் நான் இல்லை அதை நீர் நன்றாய் அறிவீர் தடுமாற்றமில்லாமல் நான் வாழ்ந்திட உம் கிருபையால் நிறைத்திடுமே 2) என் சுய பெலத்தால் ஒன்றும் செய்திடேன் அதை நீர் நன்றாய் அறிவீர் உம் பெலத்தால் எல்லாம் செய்திட உம் கிருபையால் நிறைத்திடுமே 3)சோதனைகள் தாங்க பெலனில்லை அதை நீர் நன்றாய் அறிவீர் சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்க உம் கிருபையால் நினைத்திடுமே

அன்பின் நாயகனே

அன்பின் நாயகனே ஆறுதலின் ஊற்றே என்னை அழைத்தவர் நீர் அல்லவா உம்மை நேசிக்கிறேன் 1. அலைகள் படகை ஆழ்த்தும்போது காற்று பலமாய் அடிக்கும்போது படகு முழுகும் நிலை வரும்போது நம்பிக்கை எல்லாம் இழக்கும்போது 'பயப்படாதே நான் உன்னுடனே மகனே நான் உந்தன் அருகில் தானே  எந்தன் காவல் உனக்கல்லவா' என்ற அன்பை நான் மறப்பேனோ  2. எந்தன் வாழ்வின் தூயவனே வாழ்க்கை எல்லாம் உமக்கு தானே உம்மை விட்டு எங்கு செல்வேன் உந்தன் பின்னால் வருவேனே உந்தன் சித்தமே என் வாழ்வில் உந்தன் அழைப்பே என் மனதில் என்னையே என்றும் உமக்கென தந்த அன்பை நீர் மறப்பீரோ