Skip to main content

நீங்க மட்டும் இல்லாதிருந்தால்

நீங்க மட்டும் இல்லாதிருந்தால்
என் துக்கத்தில் நான் அழிந்திருப்பேன்
உங்க வார்த்தை மட்டும் தேற்றாதிருந்தால்
மன சஞ்சலத்தில் மரித்திருப்பேன்
இயேசய்யா உம் அன்பு போதுமே
என் நேசரே உம் கிருபை போதுமே

1. தண்ணீர்கள் மத்தியில் நடந்த போது
மூழ்காமல் காத்தது உம் கிருபையப்பா
அக்கினியில் நடந்த போது – (கடும்)
எனை மீட்டது உம் கிருபையப்பா

2. நிந்தைகள் அவமானம் சூழ்ந்த போது
ஆற்றியே அணைத்தது உம் கிருபையப்பா
விக்கினங்கள் சூழ்ந்த போது – (மரண)
எனை மீட்டது உம் கிருபையப்பா

3. அன்னையின் கருவிலே தெரிந்துகொண்டு
இம்மட்டும் காத்தது உம் கிருபையப்பா
வழிதப்பி அலைந்த போது – (உந்தன்)
மீட்டு இரட்சித்தது உம் கிருபையப்பா

Comments

Popular posts from this blog

அன்பின் நாயகனே

அன்பின் நாயகனே ஆறுதலின் ஊற்றே என்னை அழைத்தவர் நீர் அல்லவா உம்மை நேசிக்கிறேன் 1. அலைகள் படகை ஆழ்த்தும்போது காற்று பலமாய் அடிக்கும்போது படகு முழுகும் நிலை வரும்போது நம்பிக்கை எல்லாம் இழக்கும்போது 'பயப்படாதே நான் உன்னுடனே மகனே நான் உந்தன் அருகில் தானே  எந்தன் காவல் உனக்கல்லவா' என்ற அன்பை நான் மறப்பேனோ  2. எந்தன் வாழ்வின் தூயவனே வாழ்க்கை எல்லாம் உமக்கு தானே உம்மை விட்டு எங்கு செல்வேன் உந்தன் பின்னால் வருவேனே உந்தன் சித்தமே என் வாழ்வில் உந்தன் அழைப்பே என் மனதில் என்னையே என்றும் உமக்கென தந்த அன்பை நீர் மறப்பீரோ

எப்படி நான் மறப்பேன்

உம் அன்பு எத்தனை பெரிதையா இயேசையா உம் அன்பு பெரிதையா எப்படி நான் மறப்பேன் எப்படி நான் மறப்பேன் எப்படி நான் மறப்பேன் உம் அன்பை 1.பாவத்தின் பாரத்தால் சோர்ந்து நான் போகையில் பாசமாய் வந்தென்னை இரத்தத்தால் மீட்டீர் 2.தனிமையில் கண்ணீரில் கலங்கி நான் நிற்க்கையில் வலக்கரம் கொண்டென்னை மார்பில் அணைத்தீர் 3.துரோகி நான் உம்மையே பரிகாசம் செய்தேனே நேசமாய் வந்தென்னை சேர்த்து கொண்டீரே

கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்

கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன் கிருபையால் இறங்கிடுமே தடுமாற்றமில்லாமல் நான் வாழ்ந்திட உம் கிருபையால் நிறைத்திடுமே 1) உம் கிருபை இல்லையென்றால் நான் இல்லை அதை நீர் நன்றாய் அறிவீர் தடுமாற்றமில்லாமல் நான் வாழ்ந்திட உம் கிருபையால் நிறைத்திடுமே 2) என் சுய பெலத்தால் ஒன்றும் செய்திடேன் அதை நீர் நன்றாய் அறிவீர் உம் பெலத்தால் எல்லாம் செய்திட உம் கிருபையால் நிறைத்திடுமே 3)சோதனைகள் தாங்க பெலனில்லை அதை நீர் நன்றாய் அறிவீர் சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்க உம் கிருபையால் நினைத்திடுமே